12. கால் பந்தால் உலகம் அழிவு!

பல பேருக்கு கால் பந்து என்றால், கால் பந்தாட்டம் தான் நினைவுக்கு வரும். இந்த கால் பந்தாட்டம், யு. எஸ் இல் கைகளால் விளையாட படுகிறது (கிழக்கைச் சார்ந்த நாடுகளின் செயல்களை மாற்றி செய்வதே மேற்கு நாடுகளின் வழக்கமாயிற்றே :))
Foot ball
இதற்கும் ஒரு சுவாரசியமான வரலாறு. 19 ஆம் நூற்றாண்டில், இங்லாண்ட் நாட்டை சேர்ந்த கால் பந்தாட்ட வீரர், விளையாடும் போது, எவ்வளவு நேரம் கால்களால் இந்த பந்தை விளையாடுவது என களைத்து போய், கைகளில் பந்தை எடுத்து ஓடத் துவங்கினாராம். இவர் பெயர் விவரம் தெரியவில்லை. இப்படி கைகளாலும் விளையாடி கோல் போடலாமே என்று உதித்த விளையாட்டு தான் "ரக்பி" (Rugby) விளையாட்டு.

Rugby/Football

புதிய விளையாட்டு தான் உருவயிற்றே. எல்லா பந்தும் ஏன் உருண்டையாக இருக்க வேண்டும் என்று, முட்டை வடிவம் பந்தை ரக்பிக்கு பயன்படுத்தினார்கள். இந்த வடிவம் கைகளுக்கு பிடிக்கவும் வாட்டமாக இருக்கும்.

மத்திய 1800 ஆம் ஆண்டுகளில், இங்லாண்ட் நாடும், அமெரிக்கா நாடும், அமெரிக்காவில் உள்ள மாசசுசட்ஸ் (Massachutes) என்னும் இடத்தில் கால் பந்தாட்டம் விதிமுறைகளிலிருந்து சிறு மாற்றங்களோடு புதிய ரக்பி விளையாட்டு விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள். இருப்பினும் அமெரிக்கா "ஃபுட்பால்" என்றே இந்த விளையாட்டை அழைத்தது.

1920 இல், நிறைய அமெரிக்கர்கள் விளையாட தொடங்கி, பின் இதற்கு தொழிற் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது உருவானது தான் "அமெரிக்கன் ப்ரொஃபெஷ்னல் ஃபுட்பால் அசோசியேஷன் " (American Professional Football Association APFA). இது பின் "நேஷனல் ஃபுட்பால் லீக்" (Natioanl Football League NFL) என மாறியது.

கால் பந்தால் உலக அழிவு என்று தலைப்பை
வைத்து விட்டு, Breifcase இது என்ன வரலாறு சொல்கிறேன் என சந்தேகமா? இருங்க சொல்லுறேன். இப்படி அமெரிக்காவிற்கு பிடித்த விளையாட்டு, அமெரிக்கா அரசியலுக்கும் பிடித்து விட்டது. உலகிலேயே அதிக சக்தியுள்ள மனிதராக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி, எங்கு சென்றாலும் அவருடைய தளபதி லியூடனன்ட் ஜெனரல் (Lieutanant General) "ஃபுட்பால்" எனும் சிறிய பெட்டியை கூடவே எடுத்து செல்வார்.

அந்த பெட்டியிலே என்ன விசேஷம் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது :).
Missile Launch
அது சும்மா விளையாட்டு பெட்டி இல்லை மக்களே. உலகெங்கும் அணு ஆயுத போரை துவங்க கூடிய கணிணி மற்றும் அதை சார்ந்த "கோட்ஸ்" (Codes) அதில் இருக்கின்றன. அந்த பெட்டிக்கு "டூம்ஸ்டே ப்ரீஃப் கேஸ்" (Doomsday Briefcase) என்றும் ஒரு பெயர் உண்டு.

Earth

நேற்று அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்யும் "ஏர் ஃபோர்ஸ் ஒன்" (Air Force One) விமானத்தை பற்றி ஒரு டிவிடி பார்த்தேன். அதில் கிடைத்த ஃபுட்பால் தகவலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள நினைத்தேன்.

ஜனாதிபதி விமானத்தில் பறக்கும் சமயத்தில், அமெரிக்கா தாக்கப் பட்டால், விண்ணிலிருந்தே அணு ஆயுத போரை துவக்க எல்லா வசதிகளும், வழிமுறைகளும் கொண்டது தான் அந்த ஃபுட்பால் பெட்டி. அந்த ஃபுட்பாலால் உலகத்திற்கு அழிவு என்றோ ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம். அவ்வளவு வலிமை மிக்கது அந்த ஃபுட்பால்!

சுற்றி வளைத்து பேச தெரிந்தது, எழுதவும் இப்போது உதவுகிறது :))

பின் குறிப்பு:

இதற்கு உபயோகமாக இருந்த வலைப்பு www.football.com மற்றும் "Airforce One" National Geography DVD.


 

11. கூவத்தில் படகு சவாரி


எல்லோரும் ஏதாவது ஒரு செயலுக்கு முன் கனவு காண்கிறார்கள். சும்மா இருக்கும் எனக்கும் ஒரு பகல் கனவு தோன்றியது. அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சிங்காரச் சென்னையிலே ஓடும் கூவம் ஆறில் படகிலே சவாரி செய்கிறேன். மாசுப்பற்ற கூவத்தில் அல்ல. தெளிவான தண்ணீரோடு தாமரை, அல்லி போன்ற மலர்களுடன் ஓடும் கூவத்தில் தான். அது மட்டுமா. கூவம் நதியோடு இருக்கும் வீடுகளின் பின் புறத்தில் மக்கள் நதியில் நீராடி மகிழ்கிறார்கள். வெயில் காலம் அல்லவா. படகிலே பிரயாணம் செய்யும் போது, எத்தனை உணவகங்கள் "கூவம் ரிவர் வ்யூ" (Koovam River View) மற்றும் "கூவம் கட்லெரி" (Koovam Cutlery) என்றெல்லாம் இருக்கின்றன. மக்கள் நாள் முழுவதும் உழைத்து, இந்த மாதிரி உணவகங்களில், இரவு சிறிது நேரம் கூவத்திலே வீசும் தென்றலோடு (சந்தன மணம்) அருஞ்சுவை உணவையும் உண்டு மகிழ்கிறார்கள். இந்த படத்தில், இடப்பக்கம் இருப்பது அடையாறு, அடுத்து இருப்பது கூவம் (படத்தை சொடுக்கவும், விரிவான படம் பார்க்கலாம்).

"கூவம் கூவம் சென்னையின் ஆறு கூவம் கூவம்...குக் குக் குக் குக்...." என்று மனதிலே பாப் பாடல் வேறு பாடிக் கொண்டு செல்கிறேன் :) . இந்த கனவு பலிக்குமா?? எனக்கு மறு பிறவிகளில் நம்பிக்கை இல்லை. இந்த பிறவியிலேயே இந்த கனவு பலித்தால் எவ்வளவு பாக்யசாலி ஆவேன் நான் :).
DC Potomac river
யு.எஸ்.ஏ வில் உள்ள வாஷிங்டன் டி.சி, மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா ஆகிய மூன்று மாநிலங்களிலும் போட்டோமாக் (Potomac) என்று ஒரு ஆறு ஓடுகிறது. இந்த ஆறில் தண்ணீர் தெளிவாகத் தான் ஓடும். இந்த நதியில் 1930 இல் இந்த மூன்று மாநிலங்களின் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கப் பட்டது. பின்பு, விஞ்ஞானம் வளர்ச்சி அடைய, சாக்கடை கழிவு நீரை நிறைய சிகிச்சைகளுக்கும் செய்முறைகளுக்கும் அறிமுகப்படுத்தி, மாசுத் தன்மையை குறைத்து பின் நதியிலே கலக்குகிறார்கள். போடோமகாவது பரவாயில்லை.

லண்டனிலே ஓடும் தேம்ஸ் நதியில் இன்னமும் கூட நேரடியாக சாக்கடை கலக்கப்படுகிறது.

சென்னை மாநகரிலே இரண்டு ஆறுகள் ஓடுகின்றது. அடையாறு மற்றும் கூவம். சில தொழிற்சாலைகளின் கழிவு நீர் கூவத்திலே நேரடியாக கலக்கப் படுகின்றது.

சாக்கடை கழிவு நீர் சிகிச்சைப் படுத்தும் மயங்கள் (Sewage Treatment Plants) சென்னையில் நெசப்பாக்கம், கோயம்பேடு, வில்லிவாக்கம், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கின்றன. சுமார் 267 எம் எல் டி (mld) கழிவு நீர் இந்த இடங்களில் "Primary treatment and Secondary treatment" ஆகிய சிகிச்சைகளால் பதப் படுத்தப்படுகிறது. இவ்வாறு சிகிச்சைப் படுத்தியும், கூவம் நீர் எவ்வளவு அழுக்கு எவ்வளவு துர் நாற்றம்.
Blue plains

வாஷிங்டன் டி.சி யில் உள்ள "Blue Plains Advanced Wastewater Treatment Plant (AWTP)" கழிவு நீர் சிகிச்சை மையத்தில், ஆரம்பம் மற்றும் இரண்டாவது சிகிச்சை தவிர "nitrification/denitrification, effluent filtration, chlorination/dechlorination and post aeration" என்ற சிகிச்சைகளால், கழிவு நீர் மேலும் வடிக்கட்ட படுகிறது. சென்னையில், சுமார் 23 எம் எல் டி இரண்டாவது சிகிச்சை பெற்ற கழிவு நீரை சென்னை பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிடட் (Chennai Petroleum Corporation Limited) மற்றும் மட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் (Madras Fertilizers) கு விற்கப்படுகிறது. இதில் கிடைக்கும் வருமானமோ வருடத்திற்கு 5 கோடி ரூபாய்.

கழிவு நீரிலிருந்து எரி பொருள் கூட எடுக்கலாம் என ஒரு பதிவு இருக்கிறது. இவ்வாறு சாக்கடை கழிவு நீரை மேலும் சிகிச்சை படுத்தினால், கூவம், அடையாறு மற்றும் பக்கிங்கம் கனாலில் துர் நாற்றம் வீசும் அழுக்கான நீர் ஓடாது. விஞ்ஞானத்தை மேலும் பயன் படுத்தி சென்னை நதிகளை சுத்தம் செய்தால், சிங்காரச் சென்னை நறு மணக்கும்.

படகு சவாரி, ஜெட் ஸ்கீயிங்("Jet Skiing" நீரிலே ஸ்கூட்டர் போல வாகனம் ஓட்டுவது), பாரா செய்லிங் ("Para Sailing" படகிலேயிருந்து, வானத்திலே பாராஷூட் மூலம் பறப்பது) போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடலாம் (ஏழை மக்கள் மீன் பிடித்து உண்ணலாம். நிம்மதியாக நீச்சல் அடிக்கலாம், அது போதுமே :)).

சென்னைவாசிகள் (என்னையும் சேர்த்து), சென்னைக்கு வருபவர் எல்லோரும், கூவத்தை மாசுபடுத்துவதில் பங்கு கொள்கிறோம். அரசாங்கம் தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் சாக்கடை கழிவு நீரை, கூவத்தில் கலக்காமல் அதி நவீன சிகிச்சை மயங்களுக்கு முதலில் அனுப்பி, அதனால் வரும் உரம், எரி பொருள் ஆகிவற்றை எடுத்து, மீதம் நீரை ஆறுகளில் அனுப்பினால், கூவம் ஆறாக ஓடும், சாக்கடையாக அல்ல.

கூவம் அழகிய நதியாக ஓடும் பொன் நாள் எந்நாளோ ??

 

10. என் இனிய ஆறு

ப்ளாக் ஆரம்பித்து 23 நாட்களே ஆகின்றன. அதற்குள் ஆறு விளையாட்டில் பங்கு கொள்ள அழைத்த செல்வனுக்கு மனமார்ந்த நன்றி.

பிடித்த விளையாட்டு

1) வாலிபால் (பீச்சில் விளையாடுவது இன்னும் பிடிக்கும்)

2) பாட்மின்டன்

3) சொப்பு சாமான் - சிறிய வயதில் வீட்டிற்கு வெளியே விளையாடியது. இப்போது வீட்டிற்குள் :)

4) என் பி ஏ கூடைப் பந்தாட்டம் பார்க்க பிடிக்கும்

5) கேரம் போர்டு

6) கூட்டாஞ் சோறு

சிறிய வயதில் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு எல்லாம் திருடி, தோழிகளுடன் ஒன்றாக கூட்டாஞ் சோறு சமைத்து, அரை வேக்காடாக உண்டது ஒரு நல்ல மறக்க முடியாத அனுபவம் :)

பார்க்க விரும்பும் நாடுகள்: (முதல்ல இந்தியா முழுமையா பார்க்கனும்)

1) ஈஜிப்ட்

2) சைனா

3) அர்ஜென்டினா

4) இடாலி

5) சௌதி அரேபியா

6) நிலா (இன்னும் இங்க பாட்டி வடை சுடுறாங்களான்னு பார்க்கனும் :)) )

பிடித்த இந்திய நடிகைகள்:

1) ஸ்ரீதேவி

2) சாவித்ரி

3) மாதுரி தீக்ஷித்

4) பத்மினி

5) மனோரமா

6) மீரா ஜாஸ்மின்

பிடித்த இந்திய நடிகர்கள்:

1) சிவாஜி

2) நாகேஷ்வராவ்

3) அமிர்கான்

4) பிரகாஷ் ராஜ்

5) சிவகுமார்

6) சூர்யா

இன்னும் இரண்டு பெயர சேர்த்து சொல்லுறேனே.

7) தலைவர் கவுண்டமணி

8) என் எஸ் கிருஷ்ணன்

பிடித்த உணவுகள்: 6 எண்ணிக்கை கண்டிபா பத்தாது :))

1) என் அம்மா சமைத்து பரிமாரும் முழு உணவு (Full meals).

என் அம்மா வைக்கும் சாம்பாருக்கு என்ன மணம் என்ன மணம். அவர் வைக்கும் ரசத்திற்கு ஈடு இணையே இல்லை. அவர் சமைக்கும் எல்லா சமையலிலும் நல்ல மணமும் சுவையும் இருக்கும்.

2) இட்லி வெங்காயச் சட்னி

இட்லியுடன், நல்லெண்ணை கலந்த வெங்காயச் சட்னி இருந்தால் சும்மா கப கபன்னு சாப்பிடலாம்.

3) பரோட்ட காய்கறி குருமா

ஹோட்டல் சரவண பவனில் பரோட்டாவும் காய்கறி குருமாவும் பிரமாதமாக இருக்கும்.

4) ஸ்பைசி பாஸ்தா மற்றும் காய்கறி பீட்ஸா

5) காரப் பணியாரம் தேங்காய்ச் சட்னி

6) கேழ்வரகு அடை

பி(ப)டித்த புத்தகங்கள்:

1) டாக்டர் உதய மூர்த்தியின் "எண்ணங்கள்"

2) திருக்குறள் - இன்னும் முழுமையாக படிக்கவில்லை

3) The Last Temptation - Val McDermid

4) Dark side - P.T. Dueterman

5) Blood Line -Sidney Sheldon

6) சேக்கிழார் அடிச்சுவட்டில் (படித்துக் கொண்டிருப்பது)

பார்க்க விரும்பும் (விரும்பிய) மக்கள்:

1) M.S. சுப்புலக்ஷ்மி அம்மா

2) இளையராஜா

3) அப்துல் கலாம்

4) மைக்கேல் ஜாக்சன்

5) காமராஜர்

6) அன்னை தெரஸா

பிடித்த தமிழ் படங்கள்:

1) சதி லீலாவதி

2) பாட்ஷா

3) சபாஷ் மீனா

4) மாயா பஜார்

5) வாலி

6) டிஷ்யூம்

ஆறு விளையாடிற்கு யாரை அழைப்பதென்றே தெரியவில்லை. எனக்கு தெரிந்தவர்களை ஏற்கனவே அழைத்து விட்டனர். இருப்பினும் புதிய நண்பர்களை அழைக்கிறேன்.

1) கீத லதா

2) சுமா

3) சௌமியா

4) Cyril அலெக்ஸ்

5) செந்தழல் ரவி

6) 'கொங்கு' ராசா

வாருங்கள் அனைவரும். உங்களுக்கு பிடித்த "ஆறு" களைப் பற்றி கூறுங்கள்!


 

9. பாஸ்தா பிரியாணி

வெளி நாடுகளில் பாஸ்தாவை சீஸ் (Cheese) அல்லது தக்காளி தொக்குடனோ சேர்த்து தான் பரிமாருவார்கள். நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி ஸ்பைசி பாஸ்தா பார்த்தோம். அடுத்து பாஸ்தா பிரியாணி இங்கே பார்ப்போம்.

செய்யும் நேரம்: 40 நிமிடங்கள்.

தேவையான பொருட்கள்:
1. பாஸ்தா - 2 கப்
2. கேரட் - 1/2 கப்
3. பீன்ஸ் - 1/2 கப்
4. பச்சை பட்டாணி - 1/4 கப்
5. பச்சை மிளகாய் - 2
6. தக்காளி - 1/4 கப் நறுக்கியது
7. வெங்காயம் - 1/4 கப் நறுக்கியது
8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
9. மஞ்ச தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு தேவையான அளவு
11. சமையல் எண்ணை (அ) நெய் - 4 தேக்கரண்டி
12. லவங்கம் - 3
13. கொத்தமல்லி தழை - சிறிது
14. தண்ணீர் - 3 கப்

செய்முறை:
1. ஒரு குக்கரில் சிறிது எண்ணை (அ) நெய் விட்டு, காய்ந்ததும், லவங்கம் தாளித்து, பின் மஞ்ச தூள் போட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
2. வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
4. தண்ணீரை ஊற்றி பின் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
5. கொதித்தவுடன், பாஸ்தாவை சேர்த்து, கிளறி குக்கரை 2 விசில் வரை விட வேண்டும்.
6. குக்கர் அழுத்தம் அடங்கியதும், பாஸ்தாவில், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாருங்கள்.

பின் குறிப்பு:
1. எண்ணையும் நெய்யும் கலந்தும் பயன்படுத்தலாம்.
2. பிரியாணி செந்நிறத்தில் வர வேண்டுமானால், கேசரி தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.
3. காலிஃப்ளவர் மற்றும் உருளை கிழங்கைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
4. பாஸ்தா பிரியாணிக்கு, ஒரு கப் பாஸ்தாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதுவே பாஸ்தா சூப் என்றால், 3 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் (ஒரே கல்ல ரெண்டு மாங்கா :)) )
5. இந்த மாதிரி சூப் செய்யும் போது, தண்ணீர் கொதிக்கும் பொழுது சிறிது சோளமாவையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

 

8. அடுத்த கன மழைக்கு தமிழகம் தயாரா?


போன வருடம் (2005) தமிழகத்தில் பெய்த தொடர் மழையை எவராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. கிட்ட தட்ட எல்லா ஏரிகளும், அணைகளும் நிரம்பிவிட்டன. இன்னும் சில வருடங்களுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லையென்றாலும், அடுத்த கன மழையை தமிழகம் தாங்குமா என்று யோசிக்க வேண்டும். எவ்வளவு அழிவு அந்த மழையால். உயிர் அழிவு, வீடுகள் அழிவு, வயல்கள் அழிவு, ரயில் தண்டவாளங்கள் அழிவு, சாலைகள் அழிவு இன்னும் நிறைய!. போன அரசாங்கமும், சில ஆயிரம் கோடிகளை பாதிக்க பட்ட இடங்களை சரி செய்வதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கவும் மத்திய அரசிடம் வாங்கினார்கள். அடுத்த கன மழையை சமாளிக்க என்ன முயற்சிகளை எடுத்தார்கள் என தெரியவில்லை. போன அரசாங்கத்தில், "மழை நீர் சேகரிப்புத்திட்டம்" என்று அறிமுகப்படுத்தியதால், ஒவ்வொரு வீட்டின் வெளியே சம்ப்பில் (Sump), நீரை சேகரித்தார்கள், தேவை பட்ட நேரங்களில் உபயோகித்தார்கள்.

அடுத்த கன மழையை சமாளிக்க நாம் இங்கே சில வழிகளை காண்போம்.
1. தமிழகம் எங்கும் நிறைய பூமி, விவசாயத்திற்கு பயன் படாமல் இருக்கின்றன. இந்த மாதிரியான பூமியில், ஏரிகளை வெட்டலாம். 5 (அ) 10 குக்கிராமங்களுக்கு ஒரு ஏரி என்ற விதம், தமிழகம் எங்கும் ஏரிகளை உருவாக்கலாம். ஏற்கனவே உள்ள ஏரிகளை விரிவாக்களாம்.

2. சுரங்க பாதையில் பெரிய குழாய்களை (Tunnels) வைத்து, எல்லா ஏரிகளையும் இணைக்கலாம் (ஊரெங்கும் சாலை போடும் போது சுரங்க பாதையில் குழாய் முடியாதா??). இந்தியா முழுவதும் நதிகளைத் தான் இன்னும் இணைக்க முடியவில்லை. தமிழகத்தில், ஏரிகளையாவது இணைத்து, மழை நீரை வீணாக கடலில் கலக்க விடாமல், விவசாயதிற்காவது உபயோக படுத்தலாம்.

3. பெரிய ஏரிகளுக்கு அணைகளை கட்டி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறாக செய்தால், சிங்கார சென்னைப் போல வனப்பு தமிழகம் என்று விளங்கும். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஏரிகள், ஓரத்தில் மரங்கள், பூங்காக்கள், படகு சவாரி. வழிப்போக்கருக்கு இளைப்பார சொர்கமாக இருக்கும் அல்லவா.
வேறேனும் கன மழையை சமாளிக்க வழிகள் இருந்தால் இங்கே பின்னோட்டதில் எழுதவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.

 

7. மூடநம்பிக்கைகளும் தற்போதய வாழ்வும்

மூடநம்பிக்கைகள் எல்லா நாடுகளிலுமே மக்களால் நம்பப்படும் ஒரு விஷயம். நாத்திகருக்கு மூடநம்பிக்கை ஆத்திகரோடு குறைவாகத்தான் இருக்கிறது. சில மூடநம்பிக்கைகளில் ஏதாவது ஒரு உட்கருத்து இருக்கும். பாமர கல்வி அறிவற்ற மக்களுக்கு சில விஷயங்களை நேரடியாக கூறினால், அவர்கள் அலட்சியமாக கருதுக்களை நிராகரித்து விடுவர். அவர்கள் கவனத்திற்காக உருவானவையே மூடநம்பிக்கைகள் என நான் நினைக்கிறேன். ஒவ்வொரு மூடநம்பிக்கைகும் "ஏன் இவ்வாறு" என்று கேள்வி எழுப்பினால், அப்போது உண்மை விளங்கும்.

சில மூடநம்பிக்கைகளை இங்கு காண்போம்.

1. பூனை குறுக்கே போனால் போன காரியம் நடக்காது.
பூனை பொதுவாக மனிதனுக்கு நண்பனாக கருதமாட்டார்கள். பூனை திருடி தான் பால் குடிக்கும். எந்த இந்து கடவுளும், பூனையை வாகனமாக வைக்கவில்லை. பூனையின் இயற்கை குணம் அறிந்து தான் இந்த நம்பிக்கை தோன்றியிருக்கும். விஞ்ஞான ரீதியாக இது உண்மை கிடையாது. பாவம் பூனைகள் :(.

2. நகத்தை வீட்டிலே வெட்டினால், லட்சுமி வராது.
வீட்டிலே நகம் வெட்டும் போது, இங்கு அங்கு என்று சிதறி விழும். நகம் சற்று கூர்மையாக இருக்கும். நடக்கும் போது காலில் குத்திவிடலாம். மற்றும் குழந்தை இருக்கும் வீட்டில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். தவழும் குழந்தைகள் தரையில் கிடைப்பதெல்லாம் வாயில் போட்டுக்கொள்ளும். இதை சோம்பேறிகளிடம் (அ) அஜாக்கிரதையான மக்களிடம் சொன்னால் கேட்ப்பார்களா? பணம் ஒரு மனிதனிக்கு மிகவும் தேவை. ஆகவே "வீட்டிற்கு லட்சுமி வராது" என்றால், வீட்டிலே நகங்களை போடமாட்டார்கள்.

3. வெள்ளிக்கிழமை கடன் கொடுக்க கூடாது, வீட்டு லட்சுமி வெளியே போய்விடும்.
வாரத்திலே ஒரு நாளாவது கடன் கேட்க்காம இருக்கத்தான் இந்த நம்பிக்கை:))

4. வடக்கு நோக்கி தலை வைத்து படுக்கக் கூடாது.
இது விஞ்ஞான ரீதியாக உண்மை. நம் மூளையில் உள்ள ஐயான்ஸ் (Ions) ஐ வடக்கிலிருந்து வீசும் காந்த அலைகள் பாதிக்கிறது. அதற்கு தான் வடக்கே தலை வைக்க கூடாது என்று முன்னோர்கள் சொன்னார்கள்.

5. அடி பட்ட இடத்திலே படும்.
இது கண்டிப்பாக ஒரு மனிதனின் அஜாக்கிரதையால் தான், பட்ட இடத்திலே அடி படுகிறது. ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டால், அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும். காயத்தை கண்டுக்கொள்ளாமல் வேறு வேலை கவனமில்லாமல் பார்த்தால், காயத்தின் மேலே மீண்டும் காயம் படுகிறது.

6. உப்பில்லா பண்டம் குப்பையிலே போடு.
தெனிந்தியா உஷ்ணமான இடம் (வெப்ப மண்டலம் Tropical area). அங்கே தினமும் மனிதனிக்கு வியற்கிறது. இவ்வாறு உடலில் உள்ள அனைத்து உப்பும் வியற்வையால் வெளியேறினால், உணவு மூலமாக உப்பை சேர்த்து அளவை சரி செய்ய வேண்டும். குளிர் பிரதேசங்களில் உப்பு குறைவாக சேர்ப்பது, நன்று. ஆகையால் தான் இப்படி ஒரு நம்பிக்கை தோன்றியிருக்கும்.

7. இலையிலோ (அ) தட்டிலோ சாப்பிடும் போது வழித்து சாப்பிடக்கூடாது, லட்சுமி போய்டும்.
சாப்பிட்டுவிட்டு வெளியே இலையை போடும் போது நாய், கோழி, காக்கா, எறும்பு மற்றும் இதர பூச்சிகளும் அந்த இலையில் உள்ள மீதம் உணவை சாப்பிடும். இதர ஜீவராசிகளுக்கு நம் உணவின் மீதமாவது தானமாக கிடைக்கட்டும் என்பதால் தான் இந்த நம்பிக்கை தோன்றியிருக்கும்.

8. மாலை ஆறு மணியானா விளக்கு வைக்கனும், இல்லையென்றால் லட்சுமி வராது.
"விளக்கில்லா வீட்டில் வைத்தியன் புகுவான்" என்று ஒரு பழமொழியே இருக்கிறது. சூரிய வெளிச்சம் மறைந்ததும் வீட்டில் வெளிச்சம் இல்லையென்றால் பல பூச்சிகள், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நுழைந்துவிடும். மக்கள் ஜாக்கிரதையாக இருக்கத் தான் இந்த நம்பிக்கை.

9. செவ்வாய் வெறும் வாய். செவ்வாய்க் கிழமை புதிதாக எதையும் துவங்கக் கூடாது.
செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் கிரகத்தின் (Mars Planet) கதிர்கள் பூமியை தாக்கி, அதனால், காரியங்கள் தடை படுமோ என்னமோ "செவ்வாய் வெறும் வாய்" என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருந்தால் இங்கே தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்.

10. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
புதன் கிழமை அன்று புதன் கிரகத்தின் (Mercury) கதிர்கள் பூமியை தாக்கி, அதனால், காரியங்கள் நல்ல விதமாக நடக்குமோ என்னமோ "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருந்தால் இங்கே தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்.

11.பெண்களுக்கு மாத விலக்கு நாட்களில் மூலையில் உட்காரனும்.
சில ஆசாச்சாரமான வீடுகளில் மாத விலக்கு ஆன பெண்களை, இதை செய்யாதே, அதை செய்யாதே, இதை தொடாதே, அதைத் தொடாதே என்று பாடு படுத்திவிடுவார்கள். ஆனால் உண்மை காரணம் என்னவென்று பார்த்தால் இந்த நாட்களில் பெண்கள் வேலை செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொள்ள தான் என்று புரிகிறது.

12. குழந்தைக்கு பல் முளைக்கும் போது வயிற்று போக்கு இருக்கும்.
குழந்தைக்கு பல் முளைக்கும் போது பற்கள் ஊரும். ஏதாவது கடிக்க தோன்றும். அதனால், கையில் கிடைத்ததை வாயில் போட்டுக்கொள்ளும். இதனால் அதற்கு வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

13. 13 அபசகுண எண்.
13 ஆம் எண் நீண்ட நாட்களாக அபசகுண எண்ணாக உலகெங்கிலும் மக்களால் கருதப்படுகின்றன.

முன்பு ரோமனியர்கள் 13 ஆம் எண் இறப்பிற்கும், அழிவுக்கும் ஒரு அறிகுறியாக கருதினார்கள். வல்ஹாலா (ரோம் நாட்டில் ஒரு இடம்) வில் 12 முக்கிய மக்களுக்காக நடந்த ஒரு சிறப்பு விருந்தில், 13 ஆவதாக வந்த ஒருவன் பால்டர் (12 விருந்தினர்களில் ஒருவர்) என்பவரின் புதல்வன் ஓடினை கொன்றுவிட்டான்.

ரோமேனியர்கள் 13 ஆம் எண்ணை மந்திரவாதிகளின் எண்ணாக கருதினார்கள்.

ஏசு நாதரோடு 12 திருத்தொண்டர்கள் கொண்ட கடைசி இரவுச் சாப்பட்டிற்கு (Last Supper) அப்புறம் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

13 ஆம் எண்ணை கண்டு அஞ்சுபவர்கள் "ட்ரிஸ்கைடிகா ஃபோபியா" (Triskaidekaphobia) என்னும் வியாதி உடையவர்கள். மேற்கு நாடுகளில் 13ஆம் தேதியில் மக்கள் நல்ல காரியங்களை செய்யமாட்டார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை வரும் 13 ஆம் தேதி மிகவும் கெட்ட நாளாக கருதுவார்கள்.
பொதுவாக நிலா பூமியை 12 முறை ஒரு வருடத்தில் சுற்றி வரும். எப்போதாவது தான் 13 முறை சுற்றி வரும். இந்த ஒரு மாற்றத்திற்கும் கூட 13 அபசகுணமான எண்ணாக கருதப்பட்டிருக்கிறது.

இந்த 13 ஆம் தேதியில் மக்கள் எந்த காரியமும் செய்யாமல் இருப்பதால், வியாபாரிகளுக்கு அன்றைய வருமானம் மிக குறைவாக இருக்கும்.

இதுக்கு விஞ்ஞான ரீதியாக பதில் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து இங்கே பின்னூட்டம் இடுங்கள்.

14. குழந்தை முறத்தின் மீது அமர்ந்தால் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்வது.
:)). பிள்ளையார் கொழுக்கட்டை சாப்பிடுறாரோ இல்லையோ நாம் சாப்பிடுவோம் அல்லவா..அதுக்கு தான்.

15. ஆமை வீட்டுக்குள் நுழைந்தால் குடும்பம் விளங்காது.
சுகாவின் பதில்:

ஆமையே வீட்டுக்குள்ள நடந்து வர்ற வரைக்கும் யாரும் கண்டுக்கலைன்னா .. திருடன் வந்தா என்ன ஆகும்... அப்புறம் குடும்பம் விளங்குமா என்ன!? இந்த ஆமைன்னு சொல்றது கல்லாமை, பொறாமை..நாட்டாமை ன்னு கூட எதோ சொல்லுவாங்க :)

இதற்கு விஞ்ஞான ரீதியாக பதில் தெரியவில்லை.

16. வலது கால் எடுத்து வைத்து வருவது.
கைகளிலே வலது கையை தான் நாம் நல்லதுக்கெல்லாம் உபயோகப் படுத்துகிறோம். காலை மட்டும் ஏன் விட்டு வைக்கனும்.:)

17. கற்பினிப்பெண்கள் விரும்புவதை சாப்பிடவில்லை என்றால், குழந்தை காதில் சீழ் வழியும்.
அப்படியாவது அவர்கள் விரும்புவதை உண்ணலாம். விஞ்ஞான ரீதியாக இது உண்மை இல்லை.

இது மாதிரியான மூடநம்பிக்கைகள் இன்னமும் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இங்கு சில தான் குறிப்பிட்டுள்ளேன். உண்மை என நம்புகிறவர்களுக்கு உண்மையே. நம்பாதவர்களுக்கு மூடநம்பிக்கையே!!

 

6. இந்திய தேசிய கீதம் - தமிழாக்கம்


//ஜன கன மன அதினாயக ஜய ஹே//
எல்லா மக்களின் மனதையும் ஆளுகின்ற இறைவா வெற்றி உங்களுக்கே!

// பாரத பாக்ய விதாதா//
பாரதத்தின் விதியை அறிந்து ஆளுகின்றவனே

// பஞ்ஜாப் சிந் குஜராத் மராதா//
பாரதம் என்றாலே மனதிலே உதிப்பது பஞாப், சிந், குஜராத், மஹாராஷ்ட்ரா

//திராவிட உட்கல பங்கா//
திராவிடர், ஒரிஸா, வங்காலம்

//விந்ய ஹிமாச்சல யமுனா கங்கா//
விந்தியா மலைகள், ஹிமாச்சலம், யமுனை நதி, கங்கை நதி

//உச்சல ஜலதி தரங்கா//
மலைகளிளே எதிரொலிக்கிறது, நதிகளிலே கலக்கிறது, இந்திய கடல்கள் ஓதுகின்றது (பாரதத்தின் பெயரை)

//தப ஷுப நாமே ஜாகே//
உங்களை புகழ்ந்து போற்றுகின்றோம்

//தப ஷுப ஆஷிஷ மாங்கே//
உங்களின் அருளை கேட்கிறோம்

//காஹே தப ஜய காதா//
உங்களை போற்றி பாடுகிறோம்

//ஜன கன மங்களதாயக ஜய ஹே//
பாவங்களில் இருந்து மக்களை காப்பது உங்கள் கையில் உள்ளது

//பாரத பாக்ய விதாதா//
பாரதத்தின் விதியை அறிந்து ஆளுகின்றவனே

//ஜய ஹே ! ஜய ஹே ! ஜய ஹே ! ஜய,ஜய,ஜய,ஜய ஹே//
ஜெயம் உங்களுக்கே!!

எல்லா மக்களின் மனதையும் ஆளுகின்ற இறைவா பாரதத்தின் விதியை அறிந்து ஆளுகின்றவனே பாரதம் என்றாலே மனதிலே உதிப்பது பஞ்ஜாப், சிந், குஜராத், மஹாராஷ்ட்ரா, திராவிடம், ஒரிஸா, வங்காலம்.

"பாரதம்" என்று, விந்தியா ஹிமாலய மலைகள் எதிரொலிக்கிறது கங்கை யமுனை நதிகளில் கலக்கிறது, இந்திய கடல்கள் ஓதுகிறது.

பாரதத்தின் இறைவா, உங்களைப் புகழ்ந்து போற்றுகிறோம், உங்கள் அருளை வேண்டுகிறோம். எங்களைக் காப்பது உங்கள் கையில் உள்ளது.

ஜெயம் உங்களுக்கே!!

பின் குறிப்பு:
1. 1911 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்ரஸின் பொதுக் கூட்டத்தில் இந்த பாட்டு, முதன் முறையாக பாடப்பட்டது. இதை எழுதியவர் ரபிந்ரனாத் டாகோர். கிங் ஜார்ஜ் ஐந்து தன்னை புகழ்ந்து ஒரு பாட்டு பாட டாகோரை கேட்டுக்கொண்டார். ஆங்கிலேயர்களைப் பற்றி எழுத மனமில்லாமல், "பாரதத்தை காக்கும் இறைவன்" என்ற பொருளில் எழுதினார்.

2. என் தோழி கொடுத்த ஆலோசனைப் படி இதை தமிழிலே மொழி பெயர்த்து வெளியிடுகிறேன்.

3. இதற்கு உபயோகமாக இருந்த தளம் http://www.indianchild.com/national_anthem.htm

 

5. அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம்

தமிழ்நாட்டில் உள்ள அரசாங்க பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் ஒரு பாடமாக உள்ளது. சராசரி குழந்தைகள், எப்படியாவது மனப்பாடம் செய்து தேர்வுக்குரிய மதிப்பெண்களை எடுத்துவிடுகிறார்கள். இவர்கள் கல்லூரி செல்லும் போது இளங்கலை தமிழ் இலக்கியம் (BA Tamil Literature) மற்றும் வரலாறு (BA History) தவிர மற்ற எல்லா பாடங்களிலும் ஆங்கிலத்தில் இருப்பது இவர்களுக்கு கடினமாக உள்ளது.

திடீரென எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படித்து அவற்றை புரிந்துக்கொண்டு மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்கள் வாங்கித் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். அப்படி தேர்ச்சிப் பெற்று வேலைக்கு சென்றாலும் (உதாரணம் மென்பொருள் (Software) வேலை (அ) சந்தைப்படுத்துதல் (Marketing) துறை) அங்கே ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தால் தான் வாடிக்கையாளர்களை கவர முடியும்?.

இதற்காக நிறைய மக்கள் "பேசுகின்ற ஆங்கிலம்" ("Spoken English) பாடங்களில் சேர்ந்து பயிற்சிப் பெற்று கொள்கிறார்கள். ஏழ்மையான சராசரி மனிதன் இந்த மாதிரியான தனியார் வகுப்புகளில் சேர்வது சந்தேகம் தான். இது ஏன் அரசாங்கமே பள்ளிக்கூடங்களில் செய்யக்கூடாது? எட்டாம் வகுப்பிலிருந்தே(அல்லது அதற்கு முன்பே) "Spoken English" பாடங்களை, அறிமுகப்படுத்தினால் மாணவர்கள், ஆங்கிலப்பாடங்களை எழுதவும், படிக்கவும் தவிர சரளாமக பேசவும் கற்றுக்கொள்வார்களே!

இவர்கள் கல்லூரியில் படிக்கும் போது பாடங்கள் மிக எளிதில் புரியுமல்லவா. இந்த மாதிரியான "பேசுகின்ற ஆங்கிலம்", பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் நடத்தப்படலாம்.

எனது தோழி "நான் சிறிய வயதிலேயே ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் படித்திருந்தால், இந்நேரம் அழகாக ஆங்கிலத்தில் உரையாடி இருப்பேன்" என்று வருத்தப் படுவாள். இவ்வாறு எல்லோரும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் படித்தால், அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் என்னாகும்??

வேற்று மொழியானாலும், அரசாங்கமே கல்வித்திட்டத்தில் "பேசுவதற்கு ஆங்கிலம்" பாடங்களை அறிமுகப்படுத்தினால் மக்கள் கண்டிப்பாக பயன் பெறுவார்கள் என முழுமையாக நம்புகிறேன்.

"திரை கடல் கடந்தும் திரவியம் தேடு" என்னும் நம் தமிழர்கள் எந்த நாடு சென்றாலும், அடிப்படை ஆங்கிலம் பேசுவற்கு தெரியும் போது அந்த ஊர் மக்களிடம் மிக எளிதில் தொடர்புக் கொள்ள முடிகிறது. மற்றொரு மொழியை தெரிந்துக்கொள்ளும் போது தான் தமிழின் அருமையை புரிந்துக்கொள்ள முடியும்.

ஆகவே அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இரு மொழியிலும் சரளமாக எழுத படிக்க பேச பயிற்சி பெற்று நல்ல நல்ல வேலைகளில் பணிபுரிந்து, தமிழகத்தை முன்னேற்றுவார்கள் என நம்புகிறேன்.

 

4. ஸ்லிம் சிம்ரனாக வேண்டுமா? இதோ புதிய உணவு முறை.


எடை குறைப்பது கனவாக உள்ளது பல பேருக்கு. நான் கடைப்பிடித்த சில எளிமையான முறைகளை இங்கே சொல்கிறேன். எடை குறைப்பதற்கு முக்கியமாக பட்டினி இருக்க கூடாது. நவீன முறையில் ஜிம் சென்று தான் எடை குறைக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. எடை குறைப்பதர்க்கு மாத்திரையோ, மருந்தோ தேவையில்லை. நம் உணவு பழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும்.

ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ குறைய வேண்டுமானால் இதோ என்னுடைய புதிய உணவுத்திட்டத்தை கடை பிடியுங்கள்.

1. காலை எழுந்தவுடன் கால் லிட்டர் வெண்ணீரில், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்துங்கள்.

2. அரை மணி நேரம் கழித்து காஃபி/ டீ அருந்தலாம்.

3. காலை சிற்றுண்டிக்கு

ஓட்ஸ் கஞ்சி (அ)
பிங்க் போரிட்ஜ் (அ)
ரவா கஞ்சி (அ)
இரண்டு இட்லி (அரிசி/ரவா) (அ)
இரண்டு தோசை (அரிசி/கோதுமை)

சாப்பிடலாம். பின் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

4. காலை உணவிர்க்கும் மத்திய உணவிர்க்கும் நடுவில் (Brunch) பசித்தால்(எனக்கு கண்டிப்பா பசிக்கும்:)), பழங்கள் சாப்பிடலாம் (எடை போடக்கோடிய பழங்கள் ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் குறைவாக சாப்பிடலாம். மற்ற பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்). பின் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

5. மதிய உணவிர்க்கு சாம்பார், ரசம், மோர் மூன்றும் சாப்பிடலாம்...சாதத்துடன் அல்ல:)) கோஸுடன். கோஸை பொடிதாக நறுக்கிக்கொண்டு, அரை வேக்காடாக எடுத்து, அதிலேயே சாம்பார், ரசம் மற்றும் மோர், காய், கூட்டு அனைத்தையும் அரை வயிறு வரை சாப்பிடலாம். பின் நிறைய தண்ணீர் குடிக்கவும். மோர் குடிக்கலாம்.

6. மதியானம் ஒரு மூன்று மணியளவில் பசிக்குமே? (எனக்கு கண்டிப்பா பசிக்கும்:). சோளப்பொரி (Popcorn), வெள்ளரிக்காய், தர்பூஸனி போன்ற பழங்கள் சாப்பிடலாம். மோர் குடிக்கலாம்.

7. மாலை காஃபீ/டீயுடன் பிஸ்கட் சாப்பிடலாம் (பஜ்ஜி சொஜ்ஜி மூச்).

8. நீங்க ஆத்திகரா பலே பலே. வேலை சுலபம். பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று, ஏதாவது வேண்டிக்கொண்டு, சும்மா பத்து சுற்று கோவிலைச் சுற்றுங்கள்(மரத்தை சுற்றுவதென்றால் முப்பது சுற்று :)). இது தான் உடற்பயிர்ச்சி உங்களுக்கு (வீட்டு வேலை செய்வது தவிர).

9. இரவு உணவிர்க்கு
ரவா உப்மா (அ)
சேமியா உப்மா - 2 கரண்டி (அ)
கேழ்வரகு அடை- 2 (அ)
தோசை(அரிசி/கோதுமை)- 2 (அ) 3
இட்லி (ரவா/அரிசி)- 2 (அ) 3 (அ)
சப்பாத்தி - 2

சாப்பிடலாம். சாப்பிட்ட பின் வயிறு காலியாக (அ) உணவு பற்றவில்லை என்று தோன்றினால், இருக்கவே இருக்கு பழங்கள். பின் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

10. தூங்கப்போகும் முன் விருப்பம் இருந்தால் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.

பின் குறிப்பு:
மேற்கண்ட உணவு முறைகளில் நீங்கள் கவனிக்க வேண்டியது

1. சாதம் தவிர்க்கப்படுகிறது (இருப்பினும் இட்லி தோசை அரிசியில் ஆனது தான்).

2. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

3. நொருக்கு தீனி மற்றும் இனிப்பு பண்டங்களை முற்றிலும் மறக்க வேண்டும். மறக்க முடியாதவர்கள், அவற்றை பார்த்து ஏங்குவதர்க்கு பதிலாக, ஒன்று இரண்டு சிப்ஸ் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீர் குடிக்கவும்.

4. இனிப்பை கட்டு படுத்த முடியாதவர்கள், வெல்லத்தால் ஆன இனிப்பு பண்டங்களை சிறிதளவு சாப்பிடலாம்.

5. நீங்கள், எப்பவும் பட்டினி இருக்கத்தேவை இல்லை.

6. காலையில் வெண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்பு, ரத்தத்தில் கலந்து விடுகிறது.(அப்புறம் அந்த இரத்தம் சிறுநீரகம் சென்று, சிறுநீர் வழியாக அதிக சத்து வெளியே வந்துவிடுகிறது.)

7. கோஸ் போன்ற நீர் காய்களில் அதிக Carbohydrates கிடையாது.

8. இந்தத் திட்டம் சைவம் உண்பவர்களுக்கு மிகவும் பொருந்தும். அசைவம் உண்பவர்கள், இதே திட்டத்தோடு அசைவத்தில், மீனை அதிகம் சேர்த்துக்கொண்டு, மற்ற அசைவ உணவை குறைத்துக்கொண்டால் பலனளிக்கும்.

9. அடிக்கடி வெளியே சாப்பிட வேண்டிய நிலமையில் இருப்பவர்கள், அதிகமாக காய் (பொறியல், கூட்டு), பழங்களை சேர்த்துக்கொண்டு, சாதத்தின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.

10. நண்பர்கள் (அ) உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் பொது இனிப்புக்கு பதிலாக, பழங்களை கொடுக்கலாம்.

11. வீட்டிற்கு யாராவது வந்தாலும், காஃபீ/டீ க்கு பதிலாக, எலுமிச்சை பானம் குடிக்கவும், வெள்ளரிக்காய் கொரிக்கவும் கொடுக்கலாம்:) (வந்தவர்கள் இனிப்பு, சிப்ஸ், மிச்சர் போன்ற பண்டங்களை தந்துவிட்டால் அவர்களுக்கே அதை பரிமாருங்கள் (அ) வீட்டிற்கு வேறு யாராவது வரும்பொது பெருமிதத்தோடு கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொள்ளுங்கள்:))).

12. மத்தியானம் தூக்கத்தை தவிர்க்கவும்.

13. எடை குறைவதை நீங்கள் அதிகமாக சிறுநீர் போவதிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.

14. இந்த திட்டத்தை கடைப்பிடுக்கும் போது, "நொருக்கும், இனிப்பும் சாத்தான்கள், ஒஸாமா, Hitler , இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை கொடுமைப்படுத்திய ப்ரிட்ஸ். அதை நான் தீண்டமாட்டேன்" என்று மனதிலே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்:)).

15. "சாதம் சாப்பிடாமல் எப்படி இருப்பது ?" என்று நினைப்பவர்கள், மத்தியம் உணவிர்க்கு பொறியலுடன் ரசம் சாதம் சாப்பிடலாம்.

16. வெளியே மழை, இன்று நடக்க முடியவில்லை என்று வருத்த பட வேண்டாம். வீட்டிலே படிகள் உள்ளதா. பத்து முறை ஏறி இறங்குங்கள்.(யாராவது கேட்டால், "நான் உடற்பயிற்ச்சி செய்கிறேன்" என்று பெருமையுடன் கூறுங்கள்.)

17. ஒரு மருத்துவரை சந்தித்து இந்த திட்டத்தை பற்றி ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

18. தேவை இல்லாத எடையை ஒழிச்சு தள்ளுங்க. நல் வாழ்துக்கள்!!.

 

3. பிங்க் போர்ரிட்ஜ் (நம்ம ஊரு கூழ் தாங்க)

செய்யும் நேரம்: 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 1/2 கப்
2. உப்பு தேவையான அளவு
3. மோர் - 2 கப்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்கவிட வேண்டும். சிறிது உப்பு சேர்க்கவும்.
2. கேழ்வரகு மாவை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கலக்கி கொண்டு கொதித்த நீரில் ஊற்றி நன்கு கிளற வேண்டும். (இந்த மாதிரி கிளறுகின்ற வேலை எல்லாம் வீட்டில் உள்ள ஆண்களிடம் விட்டுவிடுங்கள்:))
3. தோசை மாவு பதம் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.
4. அரை டம்ளர் கூழுடன் அரை டம்ளர் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். பிங்க் போர்ரிட்ஜ் தயார்!

பின் குறிப்பு:
1. ஒரு வாரம் வரை இதை ஃப்பிர்ட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.
2. காலை சிற்றுண்டிக்கு மிகவும் நல்லது.
3. இதில் கெலொரி (Calorie) மிகவும் குறைவு.
4. கோடை காலத்திற்கு மிகவும் உகந்த உணவு.
5. "கூழ்" பழமையான வார்த்தையாக இருந்தால், "பிங்க் போர்ரிட்ஜ்"(Pink Porridge) என்று புதுமையாக கூறுங்கள்:))

 

2. ஏல்லோரையும் அண்ணே அக்கா என்பது

பொதுவாக பெண்கள் முன்பின் அறியாத ஆண்களை "அண்ணா" என்றும், அதே போல ஆண்கள் பெண்களை "அக்கா" என்றும் அழைக்கிரார்கள்.புதிதாக பார்ப்பவர்களை முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டு பின்பு “தெரிந்தவர்” என்றும், பழகிய பின் “நண்பர்” என்றும் ஏன் அழைக்க கூடாது?.

"அக்கா" என்றோ "அண்ணா" என்றோ கூப்பிட்டால் தவறு கிடையாது. ஆனால் ஒருவர் தனது சொந்த சகோதரியை போலவே மற்ற பெண்களையும் நடத்துவார் என்றால் கூப்பிடலாம். அதே போல தான் பெண்களும், சில ஆடவரை சந்திக்கும் போது, “அண்ணா” என்று அழைப்பார்கள். இது பாசத்தால் வந்த வார்த்தையாக கூட இருக்கலாம்.

பெயரோடு “திரு” (அ) “திருமதி” (அ) “செல்வன்” (அ) “செல்வி” (இது வேலைக்கு ஆவாது), சரி வெறும் பெயரோடு, "வாங்க" "போங்க" சொன்னாலே போதுமே. உங்கள் சொந்த அண்ணனை (அ) அக்காளை விட புதியவர்கள் எப்படி அந்த உன்னதமான உறவிர்க்கு பெயர் கொள்ள முடியும்.

பெண்களை "அக்கா" என்றழைத்தால் “அட உன்னை விட நான் அவ்வளவு பெரியவளா ?” என்றும் ஆண்களை அண்ணா என்றழைத்தால் “சும்மா டயம் பாஸ்க்கு கடலை போடலாம்னு நெனைச்சா…அண்ணானு சொல்லிட்டாளே சன்டாளி” என்றும் வருத்தப்படமாட்டார்களா??

ஆகையால் மக்களே எல்லோரையும் "அண்ணா" என்றும் "அக்கா" என்றும் சொல்லிவிட்டு மனதிற்குள்ளே சபலத்தோடு சின்னப்புள்ள தனமா இருப்பதர்க்கு பதிலாக எல்லோரையும் தெரிந்தவராக பிறகு நண்பனாக தோழியாக கருதுங்கள்.

 

1. ஸ்பைசி பாஸ்தா

செய்யும் நேரம்: 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:
1. பாஸ்தா – 2 கப்
2. வெங்காயம் நறுக்கியது - 1 கப்
3. தக்காளி நறுக்கியது - 1 கப்
4. மிளகாய்த்தூள்– 1 தே கரண்டி
5. உப்பு தேவையான அளவு
6. சமையல் எண்ணை – 4 தே கரண்டி
7. கொத்தமல்லி தழை சிறிது பொடிதாக நறுக்கியது

செய்முறை:
1. பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வரை வேக வைக்க வேண்டும் (குக்கர் இல்லாதவர்கள், ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பின் பாச்தவை அதில் போட்டு, 10 நிமிடஙள் வேக வைக்க வேண்டும். பின் பாஸ்தாவை வடிகட்டி கொள்ளவும்).

2. வானலியில் எண்ணை விட்டு நறுக்கிய வெங்காயத்தை வதக்கி கொண்டு பின் நறுக்கிய தக்காளியையும் வதக்கி கொண்டு, சிறிது ஆறியபின், அரைத்துகொள்ள வேண்டும்.

3. மிதமான தீயில், அரைத்த விழுதை மீண்டும் வானலியில் போட்டு, அதில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்த பாஸ்தாவையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சிறிது தண்ணீர் ஊற்றிக்கொண்டால் கலக்க சுலபமாக இருக்கும்.

4. 3 நிமிடங்கள் கொதித்த பின்பு, கொத்தமல்லி தழையை பாஸ்தா மீது தூவி விட வேண்டும்.

5. ஸ்பைசி பாஸ்தா தயார்.

பின் குறிப்பு:
1. வேகவைத்த பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தால், உடனே தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும். பாஸ்தா தனித்தனியாக பிரிந்துவிடும். பின் வடிகட்டிக்கொள்ளலாம்.

2. இன்னமும் சுவை சேர்க்க, சிறிது முந்திரி அல்லது தோல் நீக்கிய பாதாம் அல்லது தேங்காயையோ அரைத்து பாஸ்தாவுடன் கலக்கலாம் (செய்முறை 3.)

3. பாஸ்தாவில் நிறைய தாது பொருட்கள் இருக்கின்றன.

4. பாஸ்தா இந்தியாவில் “Food World” இல் கிடைக்கும்.

5. இரவு உணவிற்கு பாஸ்தா நன்றாக இருக்கும்.

 

எனது சிறிய பார்வையில்

வணக்கம்!
எல்லோரும் செளக்கியமா?

சிறிய பார்வை வந்த கதை (இன்றே படிப்பவர்களுக்கு இது செய்தி, நாளை வரலாறு:))

பத்தாம் வகுப்பு வரை தான் தமிழ் பயின்றேன். பிறகு தமிழ் பேச்சோடு நின்றுவிட்டது. இக்கறைக்கு அக்கறை பச்சை போல, இந்தியாவில் இருந்தவரை இல்லாத தமிழ் காதல், அமெரிக்கா வந்தவுடன் என்னை ஆட்கொண்டுவிட்டது.

தமிழ் பசியை புசிக்க சிறிது நாட்களாக ப்லாக் படிக்க துவங்கியிருக்கிறேன். அதற்குள்ளாகவே, "நானும் ப்லாக் ஆரம்பித்தால் என்ன?" என்று ஒரு அசட்டு துணிச்சல் தோன்றிவிட்டது. தோழிகளும் "தாராளமாக ப்லாக் எழுது(யாரு படிக்க போரா;))" என்று சொல்லவே, உதயமானது தான் இந்த சிறிய பார்வை.

இந்த ப்லாக்கில் என்ன எழுதப்போகிறேன் என்று தெரியவில்லை. என் அண்ணன் அடிக்கடி "நீ நல்லா சாபிடத்தான் லாய்க்கு" என்று சொல்லுவார். அது உண்மையோ என்னவோ, எனக்கு சமையல் குறிப்புகள் போடத்தான் தோன்றுகிறது. ஒரளவு தேர்ச்சி பெற்றப்பின் கட்டுரைகள் எழுத முயற்சிக்கிறேன்.

பொதுவாக நான் தமிழில் எழுதும் போது, அந்த பக்கமே மங்களகரமாகத்தான் இருக்கும். அவ்வளவு பிழைத்திருத்தம் :). முடிந்த வரை பிழையில்லாமல் எழுது முயற்சிக்கிறேன். பிழைகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடிக்கடி இந்த பக்கம் வாங்க. வாழ்க வளமுடன்!.

நன்றி,
நரியா

This page is powered by Blogger. Isn't yours?