உறவுகள் பாடல் வரிகள்

உறவுகள் - சன் தொலைகாட்சி தொடர்கதை

கவிஞர் வைரமுத்துவின் வரிகள்

வலை தலை எங்கும் தேடினேன் இந்த பாடல் வரிகளுக்காக..
முடிவில் நானே தொகுத்துவிட்டேன்


உறவுகளாலே உறவுகளாலே
உலகம் தொடர்கிறதே

உயிர் வந்தாலும் உயிர் போனாலும்
உறவே வருகிறதே

கரைகள் இரண்டை பிடித்தபடி
நதிகள் நடந்து போவது போல்

உறவை உறவைப் பிடித்தபடி
உலகம் உலகம் போவது போல்

எங்கே உறவுகள் இழிகின்றதோ
அங்கே சுயநலம் அழிகின்றது

எங்கே சுயநலம் இழிகின்றதோ
அங்கே உறவுகள் அழிகின்றது !

ஆ ......

ஏணி ஆவதும் உறவு தான்
அதை இடறி விடுவதும் உறவு தான்

பாதி தருவதும் உறவு தான்
கால் வாரி விடுவதும் உறவு தான்

பேருக்கு நீலம் உறவு தான்
இதை வெட்ட வருவதும் உறவு தான்

வறுமை தீமை நேருமிடத்தில் ஒன்று படுவதும் உறவு தான்
பணமும் புகழும் சேருமிடத்தில் இரண்டு படுவதும் உறவு தான்

கேட்டுப் போன உறவுகள் என்றும் விட்டுக் கொடுப்பதில்லை
விட்டுப் போன உறவுகள் என்றும் கேட்டுப் போவதில்லை

உறவுகளாலே உறவுகளாலே
உலகம் தொடர்கிறதே

உயிர் வந்தாலும் உயிர் போனாலும்
உறவே வருகிறதே

 

19. திராவிடும் க்ரிகெட்டும்

மின்அஞ்சலில் வந்தது!!

நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி' பாணியில் பேசினால்?!!
"உலகக் கோப்பை. பல விசித்திரமான போட்டிகளைச் சந்தித்திருக்கிறது.. விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் , இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி் தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும் , இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடம் தோற்றேன் - அவர்களிடம் தோறக் வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையைத் தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. ' தன்னைப் போல பிறரையும் நேசி ' என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீலடரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் ' சாத்து சாத்தென்று' சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் 'வெயில் தாங்கலை 'ன்னு பெவிலியனுக்கு ஓடும் 'மாஸ்டர் பிளாஸ்டர்களால் ' பிளாஸ்டர் போட்டுக் கொள்ளும்படி பாதிக்கப்பட்டேன்.

கேளுங்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தய்வுசெய்து கேளுங்கள் என் கதையை....."

"நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!! "
அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன். கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்.. "

நீங்கள்தான் தேசத் துரோகிகள் - ராகுல் திராவிட் அறிக்கை"
இப்ப என்ன குடிமுழுகிப் போச்சு? நாங்க தோத்ததுனால இனிமே பசங்க பரிட்சை நேரத்துல டிவி முன்னால உக்காராம படிப்பானுங்க. ராத்திரி முழுக்க கண்முழிச்சு டிவி பார்த்துட்டு காலைல ஆபிசுல தூங்காம இருப்பானுங்க! :)

 

18. நய்டியா? (அ) மேக்ஸியா?

நம் ஊரில் பெண்கள் எல்லோரும் "நய்டி" என்று ஒன்று உடுத்திக்கொள்கிறார்கள். நய்டி Nightyஎன்றால் இரவில் மட்டும் உடுத்தும் ஆடை என்பது போய் வீட்டில் உடுத்தும் ஆடை என்றாகிவிட்டது. இப்போதெல்லாம் அதுவும் இல்லாமல், அக்கம் பக்கமும் உடுத்தும் உடையாகி விட்டது. காய் வாங்க, பால் வாங்க பக்கத்து கடைக்கு செல்ல இப்படி முன்னேறி பெண்களின் பொது ஆடையாகி விட்டது.

இந்த நய்டியில் அப்படி என்ன விசேஷம் என்று பார்த்தால், அது ஒரு வசதியான மற்றும் எளிமையான ஆடை. புடவை என்றால், அங்கே ஊக்கு, இங்கே ஊக்கு என்று பல இடங்களில் புடவை ஒழுங்காக நிற்க ஊக்கு குத்த வேண்டியதாக உள்ளது (சரி வீட்டில் இருக்கும் போது யாரு குத்தப்போறாங்க).

எதற்கு இந்த நய்டி பற்றி இவ்வளவு கவலைப் படுகிறேன் என்று குழப்பமா? எல்லா நேரமமும் அணிந்துவிட்டு பிறகு ஏன் "நய்டி" என்று அழைக்க வேண்டும்? "மேக்ஸி" என்று கூறலாமே!. தமிழில் "வீட்டாடை" என்றும் சொல்லலாம் :).

பெண்களின் வீட்டாடை = பென்னாடை என்பது திரிந்து தான் அது "பன்னாடை" என்று ஒரு வார்த்தை வந்ததோ என்று கூட எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது! :))

 

17. கற்பூரம்

பெருங்காயத்தை பற்றி சொல்லியாச்சு....அடுத்து கற்பூரத்தை (என்னை பற்றி தான் :)) பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

கற்பூரம், வெள்ளை நிறமற்ற மெழுகுத்தன்மை கொண்ட அதிக நாற்றமுள்ள கட்டி, சினமோனம் காம்ஃபோரா (cinnamonum camphora) என்ற மரத்திலிருந்து வருகிறது. இது ஆசியா நாடுகளில் வளரக்கூடிய மரம். இதன் வேதிய விதிமுறை(Formula) C10H16O .

கற்பூர மரங்கள் உஷ்ன நாடுகளான இந்தியா, ஈஜிப்ட் மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் அதிகமாக வளர்கின்றன. இம்மரத்தின் வேர், தண்டு மற்றும் காம்புகளில் இருந்து கற்பூரம் எடுக்கப்படுகிறது.

நவீன உலகத்தில் கற்பூரம் பூச்சுக்கொல்லி தயாரிக்க பயன்படுகிறது. சில பட்டாசுக்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மருத்துவ ரீதியில் கற்பூரம், மயக்கம் தெளிவிக்கவும், இருதயத்திற்கும் மற்றும் பூச்சுக்கடிக்கும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு கற்பூரம் சிறிய அளவில் பயன்படுகிறது. சிறிய அளவில் சுமார் 50 மில்லி கிராம் கற்பூரத்தை உண்ணலாம். அதிகப்படியான கற்பூரம் உடலுக்கு விஷமாகும்.

கற்பூர மரங்கள் மிக மெதுவாக வளரும். முன்பு சைனா நாட்டில் கற்பூர மரங்களால் தான் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. அதன் எண்ணை வாடையால் பூச்சுக்கள் வராது. பொம்மலாட்டத்திற்கு கூட இந்த மரங்கள் பயன்பட்டன.

கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை பெற்றது கற்பூரம். இந்து மதத்தில் ஏன் கற்பூரம் ஆராதனை இறைவனுக்கு செய்து அதை அனைவரும் முகர்கிறோம் என்று இப்போது புரிகிறதா :).

 

16. பெருங்காயம்!!!

Asafoetida
நீண்ட நாட்களாக பெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்று ஒரு கேள்வி மனதிலே இருந்தது. இன்று தான் இனயத்திலே தேடி தெரிந்துக்கொண்டேன். உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

பெருங்காயம் "ஃபெருலா ஃபொட்டிடா" (Ferula foetida) அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து வருகிறது. இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகலோ மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும் (Radical). அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக நாற்றமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது.

வரலாறு:
டிபேட் மற்றும் பெர்ஷியா நாடுகளில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது வட இந்தியாவில் "ஹிங்காரா" (அ) "ஹிங்" என்று அழைக்கப்படுகிறது.

Asafoetidaஇதன் பயன்கள்:
எல்லோருக்கும் தெரிந்தது போல, பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா (Hysteria) மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. வயற்றுக் கோளாறா, கபால்னு கொஞ்சம் பெருங்காயத்தை விழுங்குங்க :)).

 

15. வேலை வேலை வேலை.

busy
கொஞ்ச நாட்களாக வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் போலவும் "பிசி" என்று சொல்ல மனமில்லை. எல்லாவற்றிர்க்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதே என் ஆசை. நீண்ட நாட்களாக ப்ளாக் எழுதவில்லை (என்னாத்த எழுதுறது :). இனிமேல் எழுதுகிறேன். மறக்காமல் படிங்க.

வாழ்க வளமுடன்!! (ப்ளாக் படிப்பவர்களுக்கு :))

 

14. பிச்சைக்காரர்களை வாழவைப்பது எப்படி?

நமது ஊரில் பிச்சைக்காரர்கள் ஏராளம். கோயில்களின் வாசலில் வயதான முதியோர்கள், Beggersபேருந்து நிலையங்களில் சிறு குழந்தைகள், சாலை ஓரங்களிலும், நடுவிலும், தாய்மார்கள் கை குழந்தைகள், ஊனமுற்றோர்கள், தொழு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இப்படி ஏராளமான பிச்சைக்காரர்கள். தெருக்களில் பாடியும், சாலை ஓரத்திலே ஓவியம் தீட்டியும் பிச்சை எடுக்கிறார்கள். இந்த அவசர உலகத்தில், இவற்றை ரசித்து ஒரு சிலரே காசு கொடுப்பார்கள். அந்த காசால் ஒரு முறை கூட வயிறு நிறைய சாப்பிட முடியாது இவர்களால்.

சுற்றுளா இடங்களில் பிச்சைக்காரர்கள், வெளிநாட்டு மக்களிடம் வற்புருத்தி பிச்சை கேட்ப்பதும் அவர்கள் காலில் விழுவதும், கோபக்கார மக்களும் அவர்களை இழிவாக பேசுவதும், இன்னும் சிலர் இவர்களை உதைப்பதும்....என்ன கொடுமை என்ன கொடுமை. உழைத்து வாழாமல் இப்படி பிச்சை எடுத்து வாழ்கிறார்களே என்று பல பேர் கோபப்படலாம்.
வல்லரசு நாடான அமெரிக்காவிலும், பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். என்ன இவர்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் பிச்சை எடுப்பார்கள்.

இவ்வாறு பொருட்ச்செல்வம் இல்லாதவர்களுக்கு எனது சிறிய பார்வையில் எவ்வாறு Beggersவாழ்வளிக்கலாம் என்று பார்க்கலாம். தமிழகத்தில், நிறைய மக்கள் இலவசமாக வேட்டி சேலைகள் தருகிறார்கள். இவர்களிடம் ஏன் போய் சேர்வதில்லை? நிறைய இடங்களில் அன்ன தானம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஏன் உணவு இல்லை?

பல அரசாங்க முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் தமிழகத்திலே இருக்கிறது. பிச்சைக்காரர்களுக்கு ஏன் இங்கு அடைக்கலம் இல்லை (அனுமதி இல்லையோ?).

இவர்களின் பிரதினிதியாக ஒரு இயக்கம் அரசாங்கம் நடத்தினால் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் "உதவும் கரங்கள்", "சிவானந்தா ஆசிரமம்" என்று நிறைய அமைப்புகள் இருக்கின்றன. இதற்கு அரசாங்கம் உதவிகின்றது. இப்படி ஒரு சில இடங்களில் இருப்பதால் மற்ற இடங்களில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு இங்கு செல்ல கூட பணவசதி இல்லாமல் இருக்கிறார்கள். நிறைய பேருந்துகள் வைத்து, இவர்களை ஒன்று திரட்டி, அந்த அந்த இல்லங்களில் சேர்க்கலாம். இவர்களுக்கு இந்த இல்லங்களில் குறைந்த பட்சம் மூன்று வேலை உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இங்கு கிடைத்து விடும். அங்கேயே இவர்கள் (முதியோர்கள் தவிர) எதாவது வேலைப்பார்க்கலாம். இவர்களுக்கு வாக்காளர்கள் அட்டைக் கொடுத்து, அரசியல்வாதிகள் ஓட்டு வாங்களாமே :))

இந்த இடங்களில் இட வசதி இல்லாவிட்டால், ஒவ்வொறு தொகுதியிலும், அந்த தொகுதி Beggersஎம்.எல்.ஏ, ஒரு வீட்டைக்கட்ட வேண்டும். உதாரனத்திற்கு, ஒரு தொகுதியில், 10 பிச்சைக்காரர்கள் இருந்தால், 600 சதுர அடியில் நீளமான ஒரு ஹால் மற்றும் கழிப்பிடங்களுடன் ஒரு வீடு (குடுசையாக இருந்தாலும் போதுமே!). ரேஷனில் அரிசி இவர்களுக்கு தரலாம். 10 பிச்சைக்காரர்களில், சில பேர், சமயலுக்கும், சில பேர் வீட்டை சுத்தமாக வைப்பதற்கும், இன்னும் சில பேருக்கு எதாவது கைத்தொழில் கற்றுக் கொடுத்து (பூ கட்டுவதோ (அ) தோட்ட வேலை செய்வதோ) வாழவைக்கலாம். அவர்களுக்கு இருக்க இடமும், உணவும் கொடுத்து, உழைப்பையும் பெற்றுக் கொண்டால், பிச்சை எடுத்து தான் வாழவேண்டும் என்ற இவர்களின் நிலையை மாற்றலாம்.

குழந்தைகள், சிறுவர், சிறுமியர் இவர்களை அரசாங்க பள்ளிக்கு அனுப்பலாம். தாய்மார்களுக்கு அங்கேயே வேலை தரலாம். இலவசமாக வேட்டி சேலை மற்றும் அன்ன தானம் கொடுக்க நினைக்கும் மக்கள், இந்த இல்லங்களுக்கு சென்று தானம் செய்யலாம்.வயதான உழைக்க முடியாத முதியோர்களை, இந்த இடத்தில் நன்கு ஓய்வு எடுக்க செய்யலாம். சில உணவு விடுதிகளில் மற்றும் கல்லூரி விடுதிகளிலும் நிறைய உணவு மீதமாகிறது. அந்த உணவைக்கூட இந்த மாதிரி இல்லங்களுக்கு தரலாம். இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 3 அல்லது 5 நபர்களை அரசாங்கமே நல்ல சம்பளத்துடன் நியமித்தால், இந்த மாதிரி ஆதவற்றோர் இல்லத்தில் பிச்சை எடுக்கும் ஏழை மக்கள் சாந்தியுடன் வாழ்வார்கள். வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதை அரசாங்கமோ அல்லது தனியரோ செயலாம். அரசாங்க பள்ளிகளில் இலவச கல்வி, அரசாங்க மருத்துவமனையில் இலவச சிகிச்சை, ஆதரவற்றோர் இல்லங்களில் உணவும் இருப்பிடமும் என்று இப்படி அடிப்படை வசதிகள் அரசு தம் மக்களுக்கு செய்துவிட்டால், பிச்சை ஏன் எடுக்க போகிறார்கள்?

இவர்களுக்கு ஊக்கமளிக்க அந்த தொகுதியின் மக்கள் எத்தனையோ பேர் வெளிநாடுகளில் Beggersஇருக்கிறார்கள். அவர்கள் மாதம் ஒரு சிறிய தொகை $1 என்று கொடுத்தாலும் அது இவ்வாறான இல்லங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் (நான் கொடுக்க தயார் :)). இவ்வாறு வேலைப்பார்க்கும் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ரு.1/- கொடுத்தாலே பிச்சைக்காரர்கள் வீதிகளில் பிச்சை எடுத்து வாழாமல், பொது இல்லங்களில் வாழ்வார்கள்.

நம் மக்கள் அதுவும் நிறைய சம்பளம் வாங்கும் மக்கள் ஏழை மக்களுக்கு தம்மால் முடிந்தது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அதை செயல்படுத்த அவர்கள் வேலைப்பார்க்கும் அலுவலகமே விருப்பப்பட்டோர் சம்பலத்தில் மாதம் ஒரு ரூபாய் (அ) ஒவ்வொருவர் விருப்பப்படும் தொகையை பிடித்து, இந்த இல்லங்களுக்கு கொடுக்கலாம். இவ்வாறான சிறு துளிகள் நாடெங்கும் பெரு வெள்ளமாக மாறும்.

தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் பிச்சைக் காரர்கள் இருக்கிறார்கள். 5 அல்லது 10 ஊருக்கு ஒரு Beggersஆதரவற்றோர் இல்லம் அமைப்பதர்க்கு ஒவ்வொரு ஊரிலும் (அ) தொகுதியிலும் அமைக்கலாம். மாதம் $ 1 (அ) 1 ப்வுன்ட் (அ) ரு 1 (அ) தமிழகத்தின் மீது பற்றுள்ள மக்கள் எந்த நாட்டிலிருந்தாலும் மாதத்தில் மீதி சில்லரையாக இருக்கும் பணத்தை எளிமையான முறையில் வலைப்பு மூலமாகவோ அல்லது வங்கி மூலமாகவோ (அ) காசோலை மூலமாகவோ அனுப்ப அரசாங்கமோ (அ) அரசாங்க உதவியுடன் ஒரு நம்பகமான தனியார் நிறுவனமோ திட்டம் வகுத்தால், கண்டிப்பாக பிச்சைக்காரர்களை நம் நாட்டில் வாழவைக்காலம். பொது மக்களும், கோவில்கலின் உண்டியலில் போடும் சில்லரையை, இந்த இல்லங்களின் உண்டியலில் போட்டால் இன்னும் அதிக புன்னியம் பெறுவார்கள்.

அரசாங்கம் மூன்று வேலை உணவு, உடுத்த உடை, இருக்க இடம் கொடுக்கிறதே, சும்மா இருக்கும் நேரங்களில், சாலை ஓரமாக பிச்சை எடுத்து நாளு காசு சேர்க்கலாம் என்று நினைக்கும் சோம்பேரிகளை என்ன தான் செய்வது :))

This page is powered by Blogger. Isn't yours?